உலகளாவிய கொவிட் -19 நெருக்கடிக்கு பின்னர் இலங்கையின் சர்வதேச விமான நிலையங்கள் பயணிகள் போக்குவரத்துக்காக நேற்றுமுதல் மீள திறக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவது சுற்றுலாக்குழு நாளை 28 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
உக்ரேனின் கியு நகரத்திலிருந்தே (kyiv) இவ்வாறு முதலாவது சுற்றுலாக்கு குழு இலங்கைக்கு வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
நாளை அதிகாலை 2.14 மணியளவில் skyup PQ 555 என்ற விமானத்தின் ஊடாக 200 சுற்றுலாப் பயணிகளைஉள்ளடக்கிய குழுவே இவ்வாறு முதலாவது குழுவாக இலங்கை வரவுள்ளது.
இவர்கள் பெந்தொட்டை மற்றும் கொக்கல பகுதிகளில் உள்ள சுற்றுலா விடுதிகளில் மாத்திரமே தங்க வைக்கப்படுவார்கள் என்றும் சாதாரண மக்களுடன் பழக்குவதற்கு இடமளிக்காத வகையில் ஒழுங்கமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரண்டாவது சுற்றுலாக் குழு உக்ரேன் விமானசேவைக்குச் சொந்தமான விமானத்தின் ஊடாக நாளை மறுதினம் இலங்கைக்கு வரவுள்ளது.
இவ்வாறு இலங்கைவரும் சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல்களுக்கு செலுத்தும் பணத்திற்கு அப்பால் தினமும் 100முதல் 150 டொலர்கள் வரையான பணத்தை தமது தேவைகளுக்கு பயன்படுத்துவார்கள் என்றும் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
