ரஷ்ய, உக்ரைன் போருக்காக இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்படி ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தில் இணைந்த இலங்கையர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய – உக்ரைன் மோதலில் 64 இலங்கையர்கள் பங்குபற்றியுள்ளமை இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த ஆட்கடத்தல் தொடர்பான தகவல்களை பாதுகாப்பு அமைச்சின் 0112 441 146 எனும் இலக்கத்திற்கு தெரிவிக்க முடியும்.










