உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்படும் ட்விட்டர் நிறுவனம்

ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலக கட்டிடங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிறுவனத்தின் இரகசிய தகவல்களை பத்திரிகைகள் அல்லது வேறு இடங்களில் விவாதிப்பதை தவிர்க்குமாறு ஊழியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles