உடப்புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்தில் மனித கழிவு ஊடாக இயற்கை எரிவாயு (பயோ கேஸ்) பெற்றுக்கொள்ளும் வகையில் அதற்கான முதற் கட்ட அபிவிருத்தி பணிகள் நேற்றுக் காலை ஆரம்பிக்கப்பட்டது.
உடப்புஸ்ஸலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.டி.வசந்த திஸாநாயக்க தலைமையில் இவ் அபிவிருந்தி பணி ஆரம்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வினவிய போது,..
தான் லூனுவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போது அங்கு மாட்டு சாணத்தால் இயற்கை எரிவாயு பெற்றுக்கொள்ளும் திட்டம் ஒன்றை மேற்கொண்டேன் அது சாத்தியமானது.
இதனூடாக லூனுவத்தை பொலிஸ் நிலையத்தில் சமையல் அறைக்கு தேவையான இயற்கை எரிவாயு பெற்றுக்கொண்டதுடன் மேலும் இதனூடாக நான்கு வீடுகளுக்கும் இயற்கை எரிவாயு வழங்கப்பட்டது.
தற்போது நான் உடப்புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்திற்கு இடம்மாறி நிலைய பொறுப்பதிகாரியாக வந்துள்ளேன். இந்த பொலிஸ் நிலையத்தில் நான்கு கழிவறைகள் உள்ளது. இவை நிரம்பி வெளியேறும் போது மனித உதவியுடன் பணம் செலுத்தி அகற்ற வேண்டியுள்ளது.
இந்த நிலையில் இந்த மனித கழிவு ஊடாக இயற்கை எரிவாயு பெற்றுக்கொள்ள திட்டமிட்டு அதற்கான தொழிநுட்டப ஆலேசனைகளையும் பெற்று பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் பூர்த்தியாக சுமார் ஏழு இலட்சம் இன்றைய காலக்கட்டத்தில் தேவைப்படும்.
இதற்காக அரசாங்கத்தின் நிதி உதவிகள் ஏதும் பெற்றுக்கொள்ளவில்லை.
மாறாக எமது பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கடமையின் பின் எஞ்சியுள்ள நேரங்களில் சிரமதான பணிகளை மேற்கொண்டு இந்த அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றேன் என்றார்.
அத்துடன் இதற்கு தேவையான சீமெந்து,கம்பி,உள்ளிட்ட பொருட்களை உடப்புஸ்ஸலாவை நகர வர்த்தகர்கள்,நலன் விரும்பிகளிடம் பெற்றுக் கொள்ளப்படுகிறது.
மேலும் அரச செலவினத்தை குறைத்து பொலிஸ் நிலைய சமையல் அறைக்கு தேவையான இயற்கை எரிவாயுவை பெற்றுக்கொள்வும் முடியும் என்றார்.
