ஊடகவியலாளரிடம் ரி.ஐ.டியினர் 3 மணிநேரம் விசாரணை

யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் தனியார் தொலைக்காட்சி சேவையின் நிகழ்ச்சித் தொகுப்பாளரும், ஊடகவியலாளருமான புலேந்திரன் சுலக்சன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டது.

குறித்த ஊடகவியலாளரை இன்றைய தினம் கொழும்பிற்கு அழைத்து வாக்குமூலம் பெற்ற பின்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விடுத்துள்ளனர்.

புலம்பெயர் நாட்டில் வசிக்கும் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர் என அடையாளப்படுத்தப்பட்ட நபருடன் ஊடகவியலாளர் முக புத்தகத்தில் நட்பில் இருந்தமை தொடர்பில்லையே விசாரணைக்கு அழைக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேரம் வாக்குமூலம் பெற்ற பின்னர் விடுவிக்கப்பட்டார்.

Related Articles

Latest Articles