‘எங்கள் சங்கத்தில் இணைபவர்களுக்கு ஆயுள் காப்புறுதி’ – அனுசா

அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் ஆயுள் காப்புறுதி செய்யும் திட்டத்தினை வகுத்து வருவதாக சட்டத்தரணியும் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடந்த 70 வருட காலமாக பல தொழிற்சங்கங்கள் இயங்கி வந்த போதிலும் தொழிலாளர்களுக்கு தன்னிறைவான சேவைகளை வழங்கிய தொழிற்சங்கங்கள் விரல் விட்டு எண்னக்கூடிய அளவிலேயே செயற்பட்டன.

எனது தந்தையும் மாபெரும் தொழிற்சங்கவாதியுமாகிய அமரர் சந்திரசேகரன் மலையக தொழிலாளர் முன்னணியை தோற்றுவித்ததே தொழிலாளர்களுக்கு தன்னிறைவான சேவைகளை வழங்குவதற்கே ஆகும்.

1994-2009க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 35, 000க்கும் மேற்பட்ட தனி வீடுகளையும் தோட்டங்கள் தோறும் மின்சாரம் குடிநீர் வசதி என ஒவ்வொரு மலையகத்தவரும் சுயமாக எழுந்து நிற்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருந்தார். ஆனால் அமரர் சந்திரசேகரனின் மறைவுக்கு பின்னர் முன்னணியின் நிலை குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் சிக்கி சின்னா பிண்ணமாகியிருக்கிறது.

தேர்தல் காலங்களிலும் தொழிற்சங்க சந்தாவை பெறும் ஜீன், டிசம்பர் மாதங்கள் தவிர்த்து தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொள்ளாத தொழிலாளர்களை கண்டுக்கொள்ளாத இது போன்ற தொழிற்சங்கங்களை விமர்சித்து விமர்சித்து காலத்தை கடத்துவதை விட தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட எம் தொழிலாளர்களுடன் ஒன்றிப்பயணிக்கும் ஒரு தொழிற்சங்கமாக அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியை நடாத்திச் செல்வதே ஒரு தலைவராக நாம் அமரர் சந்திரசேகரனுக்கு செய்யும் நன்றிக்கடனாகும்.

எனது சேவைகள் அனைத்தும் சகல தொழிலாளர்களின் நலன் சார்ந்ததாக அமையும் இதற்காக பல வேலைத்திட்டங்களை வடிவமைத்துள்ளேன். இதன் ஒரு அம்சமாக என் அமைப்பு சார்ந்த அங்கத்தவர்களைக் காப்புறுதி செய்யும் திட்டத்தினை நடைமுறை படுத்தவுள்ளேன்.

விபத்துக்களினால் குறிப்பாக தொழில் செய்யும் போது ஏற்படும் மரணங்கள் மற்றும் விபத்துக்களுக்கு எமது தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணமோ அல்லது காப்பீடோ கிடைப்பதில்லை என்பது தொடர்ச்சியாக தொடரும் அவலமாகும்.

ஆகவே அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் ஆரம்ப கட்டமாக எமது தொழிற்சங்கத்தில் உறுப்புரிமை பெற்று அங்கத்துவம் வகிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆயுள் காப்புறுதியை பேணுவது கட்டாயமாக்கப்படும்.

இயற்கையுடன் போராடி தொழில் செய்யும் போது ஏற்படும் விபத்துக்கள் உயிர் அச்சுறுத்தல்கள் தவிர்க்க முடியாது என்றாலும் அதன் பின்னர் எமது அங்கத்தவர்கள பின்னடைவை சந்திக்காது முன்னோக்கி செல்வதற்கான ஒரு உந்துசக்தியாக செயற்படவே இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளேன்.

இதுவரை காலமும் பெருந்தோட்டத்துறையில் இவ்வாறு ஏற்பட்ட மரணங்களும் விபத்துக்களும் வெறுமனே அனுதாபம் தெரிவிப்பதோடு மாத்திரமே முற்றுப்பெற்று விட்டன. இனியும் இது போன்ற மரணங்களும் விபத்துக்களும் அவலங்களாக தொடரக்கூடாது.

இதைப்போன்றே தீ விபத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர் குடியிருப்புகளையும் காப்புறுதி செய்வது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியும் உள்ளதாக தெரிவித்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles