முண்டாசு கவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழா இன்று எட்டயபுரத்தில் நடந்தது.
தனது பாட்டுக்கள் மூலம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்திய முண்டாசு கவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழா இன்று அவர் பிறந்த மண்ணான எட்டயபுரத்தில் நடந்தது.
தமிழக அரசு சார்பில் பாரதியார் மணிமண்டபத்தில் நடந்த விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், பேரூராட்சி மன்ற தலைவி ராமலட்சுமி சங்கரநாராயணன் உள்ளிட்டோர் பாரதியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், சார் ஆட்சியர் ஹூமான்சூ மங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.










