எதிரணிகள் ஓரணியில் திரண்டாலும் மக்கள் சக்தி எங்கள் பக்கம்: ஜனாதிபதி தெரிவிப்பு

“எதிரணிகள் எதற்காக ஒன்றுசேர முற்படுகின்றனவோ அந்த கனவு ஒருபோதும் நனவாகாது. எமது பயணத்துக்கு மக்கள் ஆசிர்வாதம் உள்ளது.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் பணம் வீணடிக்கப்படுவதை தடுத்து, புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த முற்படுவது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை கிடையாது எனவும் அவர் கூறினார்.

குருணாகலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு ரணில் விக்கிரமசிங்க அரசாங்க வதிவிடத்தை கையளித்துவிட்டார், அதற்காக அவருக்கு நன்றி. கோட்டாபய ராஜபக்ச, ஹேமா பிரேமதாச ஆகியோரும் ஒப்படைத்துவிட்டனர். ஆனால் மூவர் மாத்திரம் கையளிக்க மறுக்கின்றனர்.

பணம் இல்லாமல் இல்லை, ஆனால் அதிகாரத்தையும், சுகபோகத்தையும் கைவிட அவர்கள் தயாரில்லை. மக்கள் பணத்தை வீணடித்தேனும் வாழ நினைக்கின்றனர். இதற்கு இடமளிக்க முடியாது. இந்த கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும். அதனை நாம் செய்யும்போது அரசியல் பழிவாங்கல் என்கின்றனர்.

ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர், தனது மாத சம்பளத்தைக்கூட வங்கியில் இருந்து பெற மறந்துள்ளார். கடைசியில் அவரின் பிரத்தியேக செயலாளர் அந்த பணத்துக்கு வேட்டு வைத்துவிட்டார். அப்படியானால் இவர்களிடம் பணம் இல்லையா?

பாரிய வீடுகளை வழங்கமாட்டோம். செல்வதற்கு வழியில்லை என்றால் இருவர் வாழக்கூடிய அளவிலான வீடொன்றை வழங்குவோம்.
அதேவேளை எமக்கு பல சவால்கள் உள்ளன. அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். எனினும், அவர்கள் (எதிரணிகள்) குழப்பமடைந்துள்ளனர்.

அரசாங்கமொன்று ஆட்சிக்கு வந்து நிலையான நிலைமையை ஏற்படுத்துவதற்கு சிறுது காலம் எடுக்கும். அந்த காலப்பகுதிக்குள் குறுக்கு வழியில் வீழ்த்துவதற்கு முற்படுகின்றனர்.

கடந்தகாலங்களில் பல அணிகள் இருந்தன. எல்லாம் ஒன்றாக இணைந்துவிட்டனர். அவர்களின் எண்ணம் ஈடேறாது.

மக்கள் எமது பக்கம் உள்ளனர் . எமது பயணத்துக்கு ஆசிர்வாதம் வழங்குவார்கள். வெற்றியை நோக்கி செல்ல தமது பங்களிப்பை வழங்குவார்கள்.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles