கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் பதுளை பொலிஸாரால் கைது!

பதுளை, செல்வகந்த – தியனகல பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

576,500 மில்லிலிட்டர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். செல்வகந்த தியகல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அமைய பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பேரில் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரத்ன தலைமையில் பசறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பெரல்களையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும் குறித்த பகுதியில் மிக நீண்ட நாட்களாக சகிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட் சந்தேக நபரை பதுளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles