கசிப்பு காய்ச்சிய இருவர் தொலஸ்பாகையில் கைது!

கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை – கந்தகடை பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் நேற்று மதியம் (28.11.2020) கைது கைதுசெய்யப்பட்டனர்.

சிறிய வனப்பகுதியிலேயே மிகவும் சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர் எனவும், கசிப்பு காய்ச்சிவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன எனவும் குறுந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர்.

குறுந்துவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜேரத்தினவின் வழிகாட்டலுடனேயே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சுற்றிவளைப்பில் பங்கேற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் விபரம் வருமாறு,

பொலிஸ் அதிகாரி மதநாயக்க,
உப பொலிஸ் அதிகாரி புத்திவர்தன,
பொலிஸ் சார்ஜன்ட் ஹக்கலங்க – 59856
பொலிஸ் சார்ஜன்ட் ஹேரத் – 55041
பொலிஸ் சார்ஜன்ட் கொடிதுவக்கு – 70509
பொலிஸ் சார்ஜன்ட் விஜேசிறி -74768
பொலிஸ் சார்ஜன்ட் சேனாரத்தின 80903

Related Articles

Latest Articles