ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன, கடவளை பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முழுமையாக பாதிப்படைந்திருந்த நிலையில், தற்போது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
நேற்று இரவு பெய்த மழையால் வீதியின் அருகாமையிலுள்ள பாரிய வாகை மரமொன்று முறிந்து விழுந்ததில் அவ்வீதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக தடை பட்டிருந்தமையினால் ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – கண்டி, ஹட்டன் – நாவலப்பிட்டி, ஹட்டன் – கினிஹத்தேன போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் வாகன சாரதிகளும் பயணிகளும் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மரம் முறிந்து விழுந்த பகுதிக்கு வருகைத்தந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், பொலிஸார் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்து மரத்தினை அகற்றினர்.
அதன் பின்னர் குறித்த வீதியின் போக்குவரத்து வழமைப் போல் இடம் பெற்றதோடு அந்த வீதியினூடாக போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
நிருபர்கள் – டி. சந்ரு, பொகவந்தலாவ சதீஸ்










