போராட்டக்காரர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
சந்திப்புக்கான முடிவு கூட்டு தீர்மானம் இல்லை என்பதனால் கலந்துரையாடல் இடம்பெறாது என போராட்டக்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தரப்பினரும் தெரிவித்தனர்.
இது மற்றவர்களுக்குத் தெரிவிக்காமல் ஒரு தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
