வேறொருவரின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கட்டார் ஊடாக இத்தாலி நோக்கி பயணிக்க முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு – யோகப்புரம் பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
சந்தேகத்திடமான முறையில் செயற்பட்ட குறித்த நபரிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.இதன்போது இவர் போலி கடவுச்சீட்டு மூலம் பயணிக்க முயற்சித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் இத்தாலி கடவுச்சீட்டை காண்பித்துள்ளதுடன் அவரிடம் அதிகாரிகள் இத்தாலி மொழியில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனினும் சந்தேகநபரால் அதற்கு பதிலளிக்க முடியாமல் போயுள்ளது.
இந்தநிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இலங்கை கடவுச்சீட்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.










