கட்டுநாயக்க விமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை!

டயலொக் ஆசி ஆட்டாபி எல்சி (டயலொக்) உடன் சுகாதார அமைச்சு இணைந்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விரைவான பி.சி. ஆர்பரிசோதனைகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது.

Robotic Arm இணக்கமான 4000 பரிசோதனைக் கருவிகளுக்கான டயலொக்கின் பங்களிப்பானது,கோவிட் -19 தொற்று நோய்களின்போது தேசிய சுகாதாரப் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் தற்போதைய உறுதிப்பாட்டின் ஒருபகுதியாகும்.

ஏப்ரல் 2020 இல், கோவிட் -19 தொற்று நோயுடன் தொடர்புடைய சிக்கலான சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக டயலொக் ரூ.2000 இலட்சம் தொகையை வழங்குவதற்கான உறுதிமொழியை அளித்தது.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரின் உறுதிமொழிக்கு அமைய சில வாரங்களுக்கு முன்பு நீர்கொழும்பு மருத்துவமனையில் 10 படுக்கைகளை கொண்டICUஐ மேம்படுத்த உதவியுள்ளதுடன் மேலும்பல ICU விரிவாக்கங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

Robotic Arm பி.சி.ஆர் சோதனை வசதி பி.சி.ஆர்பரிசோதனையை நடத்துவதற்கும் முடிவுகளை அறிக்கையிடுவதற்குமான நேரத்தை 8 மணித்தியாலத்திலிருந்து 2.5 மணிநேரமாக வெகுவாக குறைக்கின்றது.

இது குறித்து டயலொக் ஆசி ஆட்டாபி எல் சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில்,

“CE மற்றும் ஐரோப்பிய IVD சான்றளிக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த ரோபோ தீர்வுகள், 32 மாதிரிகளை இணையாகசெயலாக்குவதுடன், கணிசமாக பாதுகாப்பான மற்றும் விரைவான சோதனை மற்றும் அறிக்கையிடலைவெறும் 2.5 மணிநேரத்தில் செயல்படுத்துகிறது.

இந்த பொறிமுறையானது வாரத்திற்கு மனித நேரங்களை பயனுள்ளதாக குறைப்பதன் மூலம் சுகாதாரத் துறைக்கும் அரசாங்கசுகாதார அதிகாரிகளுக்கும் சிறப்பாக உதவுகிறது.

இந்த ரோபோ தீர்வுகள் மூலம் விரைவான சோதனை மற்றும் அறிக்கையிடலுடன் பயணிகளின் மற்றும் நமது தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் இந்த முயற்சியில் பங்கேற்க எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கிய சுகாதார அமைச்சகத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்ராவன்னியராச்சி,

“பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிவேக ரோபோ பி.சி.ஆர் பரிசோதனைக்கு வசதிசெய்வதுட யலொக்கின் மற்றொரு சிறந்த முயற்சியாகும். ஏனெனில் அவர்கள் இலங்கையில் கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் முயற்சிகளில் சுகாதார அமைச்சகத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்துவருகின்றனர்.

டயலொக்கின் இந்த சமீபத்திய பங்களிப்பானது நாட்டின் முக்கியமான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பல பாராட்டத்தக்க முயற்சிகளை அபிவிருத்தி செய்வதாக சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கியரூ.2000 இலட்சம் உறுதிமொழிக்கு அமையவே இடம்பெறுகின்றது. டயலொக் ஆசி ஆட்டாவின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் இந்த தேசிய முயற்சிக்கு அவர்கள் அர்ப்பணித்த சேவைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம் என கூறினார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles