‘ கணவரை நாயாக மாற்றிய மனைவிக்கு அபராதம் – கனடாவில் சம்பவம்’

‘லொக்டவுன்’ விதிமுறையில் இருந்து தப்பிக்க கணவருக்கு நாய் போல சங்கிலி மாட்டி நடைப்பயிற்சி சென்ற பெண், பொலிஸாரிடம் வசமாக சிக்கினார்.

கொரோனா பரவல் காரணமாக கனடாவில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அத்தியாவசிய பணியாளர்கள், செல்லப்பிராணிகளுடன் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டும் ஊரடங்கில் அனுமதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கியூபெக் நகரின் ஷெர்ப்ரூக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை நாயாக பாவித்து நடைபயிற்சி செல்வது போல் சென்றுள்ளார். இதனை கவனித்த பொலிஸார் இது குறித்து விசாரணை அவரிடம் விசாரணை நடத்தினர்.

நான் எனது செல்லப்பிராணியுடன் தான் நடைப்பயிற்சி செல்கிறேன். என்று கூலாக பதில் அளித்தார். அரசின் அறிவிப்பை மீறியதற்காக இருவர் மீதும் அரசின் விதிமீறலுக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டது. அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles