கனடாவில் 11 பேர் பலி: பயங்கரவாத தாக்குதலா?

கனடாவில் சாலையில் நடந்த இசைத் திருவிழாவின்போது, கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 11 பேர் பலியாகினர்.

வட அமெரிக்க நாடான கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் இரவு இசைத் திருவிழா நடந்தது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஸ்பெயின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்த லாப்பு லாப்பு என்ற தளபதியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக நடந்த விழாவில், கனடாவில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டினர் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். ஆடல், பாடல், இசை, உணவு என கலாசார திருவிழா களைகட்டியிருந்தது.

அப்போது, கூட்டத்தின் நடுவே வேகமாக சீறிப் பாய்ந்த சொகுசு காரால், அப்பகுதியே போர்க் களமாக மாறியது.

விழாவில் பங்கேற்றவர்களை இடித்து தள்ளியபடி சென்ற கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் மீது மோதி நின்றது.

விழாவில் பங்கேற்றவர்களின் உடல்கள் சாலையெங்கும் தூக்கி வீசப்பட்டிருந்தன. ஆங்காங்கே, படுகாயங்களுடன் விழுந்து கிடந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசிhலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த ஓட்டுனரை, பிடித்த அங்கிருந்த மக்கள், பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், விபத்து ஏற்படுத்தியது வான்கூவர் நகரைச் சேர்ந்த, 30 வயது நபர் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதாக கூறிய பொலிஸார், ஒன்பது பேரின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் பலர், படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் விபத்து போல தோன்றினாலும், நெரிசல் மிகுந்த பகுதியில் வாகனத்தை இயக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

அதேவேளை, வான்கூவரின் லாபு லாபு தின கொண்டாட்டத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், வான்கூவர் மக்கள் மற்றும் பிலிப்பைன்ஸ்-கனடிய சமூகத்தினருடன் ஆஸ்திரேலியா நிற்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles