கம்பனிகளுக்கு வக்காலத்து வாங்கவா சில எம்.பிக்கள் கள்ள மௌனம்?

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு விடயத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மௌனம் காப்பது சந்தேகம் அளிக்கின்றது. சம்பள நிர்ணய சபைக் கூட்டத்தில் 1, 700 ரூபா சம்பளம் கிடைக்க வேண்டும் – என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

மடூல்சீமையில் இருந்து ராகல ஊடாக பிட்டமாறுவை வரை செல்லும் பிரதான வீதி ராகலையில் இருந்து பிட்டமாறுவை வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது .

குறித்த வீதிக்கு நேற்றைய தினம் 2 கிலோமீட்டர் தூரம் பாதையை செப்பனிடுவதற்காக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பாராளுமன்றத்தில் உள்ளேயும் வெளியேயும் சம்பள உயர்வு தொடர்பில் நான் தொடர்ந்து கருத்துரைத்து வருவது எம் மக்கள் அனைவரும் அறிவார்கள். இருந்த போதிலும் மலையகத்தில் வாக்கு பெறும் , பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் சந்தா பெறும் ஒரு சில அரசியல்வாதிகள் அமைதி காக்கின்றார்கள். பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காக இந்த அமைதி என்று சந்தேகம் எழுகிறது .

சம்பள நிர்ணய சபையில் மலையக மக்களுக்கு சாதகமான முடிவு எட்டப்படாவிட்டால் நாளைய தினம் பாராளுமன்றத்தில் ஒரு அணியாக நின்று எங்கள் சக்தியை நிரூபிக்க வேண்டும்.” – எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles