கம்பளை நகரில் அமைந்துள்ள பாரிய பல்பொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களில் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களின் குடும்பங்களும், தொடர்பில் இருந்தவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரிடம் கடந்த 8 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. பரிசோதனை முடிவுகள் நேற்று (12) வெளியாகின. இதன்படி 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.










