கம்பளை, இந்துக் கல்லூரி வரலாற்றில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் முறையாக 192 புள்ளிகளைப்பெற்று மாணவியொருவர் சாதனை படைத்துள்ளார்.
கம்பளை கோணடிக்கா தோட்டத்தைச் சேர்ந்த ராஜா, கனகவள்ளி தம்பதியினரின் மகளான
பானு சதுர்சிகா என்ற மாணவியே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
கோணடிக்கா தோட்டத்திலிருந்து பாடசாலை வருவதற்கு உரிய நேரத்தில் பஸ்கள் இல்லை. அதுமட்டுமல்ல அப்பகுதியில் பிரத்தியேக வகுப்புகளும் இல்லை. அப்படி இருந்தும் பரீட்சையில் சாதனை படைத்த மாணவிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கல்லூரியின் அதிபர் எஸ்.ரகு, வகுப்பாசிரியர் ஆர். கிஷாந்தி உட்பட ஆசிரியர் குழாமுக்கு பழைய மாணவர்களும் கல்விச்சமூகத்தினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.











