கலஹா, உடதெல்தோட்ட பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா!

கண்டி, கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட தெல்தோட்ட பகுதியில் யுதவியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் ஐந்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து பெற்ற புத்தகமொன்றை மீள கையளிப்பதற்காக கடந்த 5 ஆம் திகதி தனது வருங்கால கணவருடன் சென்றுள்ளார். அவ்வாறு சென்றுவந்த பின்னர் குறித்த யுவதிக்கு திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார்.

9 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையொன்றில் மருந்து எடுத்துள்ளார், எனினும் தடிமன் குறையாததால் 13 ஆம் திகதி கலஹா பிரதேச வைத்தியசாலைக்குச்சென்றுள்ளார். அங்கு வழங்கப்பட்ட மருந்தாலும் நோய் குணமடையாததால் 20 ஆம் திகதி பேராதனை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இதன்போது கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவரிடம் பீசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அம்முடிவு நேற்றிரவு ( 23.10.2020) வெளியானது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து குறித்த யுவதியின் வருங்கால கணவன் உட்பட குடும்ப உறுப்பினர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பழிகியவர்களையும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

அதேவேளை, கலஹா பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான தகவல்களை சுகாதார பரிசோதகர்கள் உரிய வகையில் வழங்குவதில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஊடகங்கள் வாயிலாகவேனும் தெரியவருவதற்கு ஊடகவியலாளர்களுக்கும் சரியான தகவலை வழங்க மறுக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

புபுரஸ்ஸ நிருபர்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles