பாடசாலைகளில் தரம் 6 தவிர்ந்த தரம் 2 முதல் தரம் 11 வரையான மாணவர்களை உள்வாங்குவதற்கான புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையானது, உண்மையில் தமது பாடசாலைகளை மாற்ற வேண்டிய குழுக்களை அடையாளம் காண தற்போதைய சுற்றறிக்கை விதிகளை மேலும் நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாணவர்களை இடைநிலை தரங்களுக்குள் சேர்த்துக் கொள்வதற்கு நியாயமான மற்றும் சமமான அணுகல் வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய முறையின் கீழ் 1-5 வகுப்புகளுக்கான அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆகவும், 6-11 வகுப்புகளுக்கு 45 ஆகவும் மாற்றாமல் இருக்குமாறு பரிந்துரை செய்கிறது.










