களுத்துறையில் ஐந்து மாடிகளைக் கொண்ட ஹோட்டலில் மூன்றாவது மாடியின் அறையில் இருந்து முழு நிர்வாணமாக கீழே விழுந்து மரணமடைந்த 16 வயதான மாணவின் மரணம் தொடர்பிலான வழக்கு, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மாணவியின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட சந்தேநபர்கள் மூவரும் மே. 26ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற இளம் ஜோடி மற்றும் பிரதான சந்தேநபர் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், ஹோட்டல் உரிமையாளரின் மனைவி பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.
