காசா எல்லையில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எகிப்துக்கு பிரவேசிக்கும் ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டவுடன் அவர்களை உடனடியாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என பலஸ்தீனத்திலுள்ள இலங்கை பிரதிநிதி அலுவலக தலைவர் பெனட் குரே தெரிவித்துள்ளார்.
அதேவேளை, காசாவில் உள்ள வைத்தியசாலைமீது நடத்தப்பட்ட தாக்குதலால் இஸ்ரேலுக்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன.










