குட்டி தேர்தலில் எஸ்.பியும் போட்டியா?

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக சமல் ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில், தாங்களும் அவ்வாறு களமிறங்குவீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே எஸ்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.

‘ தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே சமல் ராஜபக்சவுக்கு நல்லது. நானும் போட்டியிடமாட்டேன். சுதந்திரக் கட்சி அல்ல எந்த கட்சியிலும் வரமாட்டேன்.

அனைத்து எதிரணிகளும் ஒன்றிணைய வேண்டும். அதற்கான முயற்சிகளை நான் முன்னெடுப்பேன்.” எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles