குருணாகல் – அனுராதபுரம் வீதியின் எபவலப்பிட்டி பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக அந்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தெதுருஓய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த பகுதி நீரில் மூழ்கியுள்ளது.
இதன்காரணமாக அந்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
