வட்டவளை, மவுண்ஜீன் தோட்டத்தில் 11 தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று முற்பகல் 11.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும், குளவிக்கூடுகளை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததாலுமே இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
மஸ்கெலியா நிருபர்
