சிறை கைதிக்கு கொண்டுவரப்பட்ட உணவு பொதிக்குள் இருந்து, 4 பக்கெட் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
காலி சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறைதண்டனை அனுபவித்துவரும் ஒருவருக்கு, அவரின் உறவினர் ஒருவரால் சோறு பார்சல் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்டபோது, உணவு பொதிக்குள் 4 பக்கெட் போதைப்பொருள் இருந்துள்ளது. அது ஹெரோயின் போதைப்பொருளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் கொண்டுவந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி சிறைச்சாலை அதிகாரிகளும், பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
