கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது.
கொட்டகலை, குடாஓயா, டிரேட்டன், யுனிபீல்ட், திம்புள்ள பத்தனை, போகாவத்தை, மவுண்ட்வேர்ணன், ஸ்டோனிகிளிப், தலவாக்கலை, வட்டகொடை, ஒலிரூட் ஆகிய பிரதேசங்களில் உள்ள 11 கிராம சேவக பிரிவுகளில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.
க.கிஷாந்தன்
