‘கொரோனா’விலிருந்து மேலும் 840 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 840 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 485 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 330 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் 2020 மார்ச் முதல் இன்றுவரை 65 ஆயிரத்து 698 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles