‘கொரோனா தொற்று’ கண்டி – 57, பதுளை – 19, நுவரெலியா -11, இரத்தினபுரி -23

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகின்றது. எனவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்கள் பரவலாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 19 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 57 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 23 பேருக்கும் நேற்று கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles