கொரோனா – மேலும் இருவர் உயிரிழப்பு! இன்று 487 பேருக்கு வைரஸ் தொற்று!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு – 02 ஐ சேர்ந்த 76 வயதுடைய ஆணொருவரும்,  கொழும்பு – 08 ஐ சேர்ந்த 96 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109  ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 656 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 225 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இன்று இதுவரையில் 487 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles