இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில் நடைபெறும் நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்பான இரதிகூத்து மற்றும் பாய் பாய் பங்கலா என்பன அமோக வரவேற்பை பெற்றுள்ளன.
இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில், மாநில கலாசார அமைச்சின் வழிகாட்டலில் பரீட்சை உட்சப நிறுவனத்தின் ஏற்பாட்டிலேயே குறித்த நாடக விழா நடைபெறுகின்றது.
23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இவ்விரு நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன.
பொகவந்தலாவை தியேட்டர் மேட்ஸ் நாடக குழுவினரின் தயாரிப்பில் கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தில் 19 கலைஞர்கள் நடித்திருந்தனர்.
இவ்விரு நாடகங்களும் பெரும் வரவேற்பை பெற்றன. நினைவு கேடயமும், கலைஞர்களுக்கான பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.