கொள்ளுப்பிட்டியில் ரயில் தடம் புரண்டதால் புகையிரத சேவையில் பாதிப்பு

புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால், கடலோரப் பாதைக்கான புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மஹவயில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதம், கொள்ளுப்பிட்டி பகுதியில் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (27) காலை 8 மணி அளவில் புகையிரதம் தடம் புரண்டதால், கரையோரப் பாதையில் ஒரு பாதையில் மாத்திரமே புகையிரத சேவை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக புகையிரத பாதையும் சேதமடைந்துள்ளதாகவும், புகையிரத பாதையை சரி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles