பாரியதொரு அரசியல் கூட்டணியை கட்டியெழுப்பும் முயற்சியில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார்.
இதற்காக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உதவியையும் அவர் கோரியுள்ளார். இதனை ஏற்று மங்களவும் இம்முயற்சியில் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் ரணில் விக்கிரமசிங்கவை தனது மகன் சகிதம் கடந்தவாரம் சந்தித்து சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இதன்படி ரணிலின் அதிரடி அரசியல் ஆட்டம் மீண்டும் விரைவில் ஆரம்பமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
