கொழும்பு – கொள்ளுப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதிக்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்கரை வீதிக்கு உள்ள கடற்கரையில் இன்று (04) பகல் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சடலம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles