“ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமராகப் பதவியேற்கத் தயாராக இருந்தால், அவருக்கு முழு ஆதரவும் வழங்கப்படும்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
