சட்டத்தை மாற்றியமைத்து பஸில் மீண்டும் வருவார் – மொட்டு கட்சி சூளுரை

” இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான தடை நீக்கப்படலாம், சட்டத்திருத்தமொன்றை கொண்டுவருவதற்கான்மூலம் இதை செய்வதற்கான சாத்தியம் இல்லாமல் இல்லை…” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு கொழும்பிலுள்ள அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே மொட்டு கட்சி செயலாளர்  இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக உரிய நேரத்தில் கோட்டாபய ராஜபக்ச இரட்டை குடியுரிமையை துறந்தார். இலங்கை பிரஜையாக தேர்தலில் போட்டியிட்டார். எனவே, தேவை ஏற்படின் உரிய நேரத்தில் பஸில் ராஜபக்சவும் தீர்மானம் எடுக்கலாம். துறப்பதா, இல்லையா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும்.

மொட்டு கட்சி என்பது பஸிலின் முழு பலத்தில் தங்கியிருக்கவில்லை. அவரும் எமக்கு மாபெரும் சக்தி.

இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு இந்நாட்டில் அரசியல் உரிமையை இல்லாது செய்வதற்கு நான் தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பு. அது சரியான முடிவு அல்ல. தனிநபரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே, எதிர்காலத்தில் மாற்றம் வரலாம்.

சட்டதிருத்தம் கொண்டுவந்து தடையை நீக்குவதற்கான மாற்றமாகவும் அது இருக்கலாம்…” – என்றார்.

Related Articles

Latest Articles