சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது!

 

சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

45 மற்றும் 52 வயதுடைய மவுஸ்சாகலை தோட்ட சீட்டன் பிரிவை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமாரவுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து அவரது பணிப்புரையின் பிரகாரம் மஸ்கெலியா பொலிஸார், திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்டு கைது செய்தனர்.

மாணிக்கக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

 

Related Articles

Latest Articles