சட்டவிரோத சிகரெட் பக்கட்டுகள் 150 உடன் டயகம பொலிஸாரால் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்த ஆட்டோவையும் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
கம்பளையிலிருந்து டயகம பகுதிக்கு மேற்படி சிகரெட் பக்கெட்டுகளை எடுத்து செல்லப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரமே டயகம பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நாளை (8) நுவரெலியா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்