தொழிலாளர்களின் உரிமைக்காக கம்பனிகளிடம் பேரம்பேச முடியாத பிரதிநிதிகள், மக்களை வீதிக்கு இறக்கிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பான அவரின் முகநூல் பதிவு வருமாறு,
” கம்பனிக்காரர்களிடமிருந்து, தொழிலாளர்களின் தொழில்சார் உரிமைகளை வென்றெடுப்பதற்கு உருவாக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் கை சாத்திடும் பிரதிநிதிகள் திறனற்றவர்களாகவே இருக்கின்றனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஏழு பேர்ச்சஸ் காணியும், 10 லட்சம் ரூபா பெறுமதியான வீடுகளையும் கட்டி கொடுக்க தலைவர் திகாம்பரம், மக்களை வீதிக்கு இறங்க வைக்கவில்லை, போராட்டமும் செய் வில்லை.
மலையக அதிகார சபையை உருவாக்க மக்களை வீதிக்கு இறக்கவில்லை. பிரதே சபைகளை அதிகரிக்க கடையடைப்பு போராட்டமும் செய்யவில்லை.
தோட்டங்களில் காபட் பாதையை போடுவதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களை வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லவும் இல்லை.
மக்கள் உங்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளனர். கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் பிரதி நிதியாக இருக்கின்றீர்கள் ! இதை விட வேறு என்ன வேண்டும்?
1000/=ரூபாய் சம்பளத்தை பெற்று கொடுக்க,
திகாம்பரம் எவ்வாறு மக்களை வீதிக்கு இறங்காமல் உரிமைகளை பெற்று கொடுத்தாரோ
அதே போன்று உங்களுக்கு பெற்று கொடுக்க தைரியம் இல்லையா அல்லது சாணக்கியம் தெரியவில்லையா?
முடியவில்லை என்றால் உடனே கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறவும்.அதை விடுத்து விட்டு உங்களின் பெருமையையும் அருமையையும் வெளிகாட்ட மலையக மக்களை பகடைக்காயாக பயன் படுத்தாதீர்கள்.” – என்றார்.
