சாப்பாட்டு பார்சல், கொத்து ரொட்டி, தேநீர் உட்பட மேலும் பல உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.
சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் பால்மா ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாலேயே உணவு பொருட்களின் விலையையும் அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 10 ரூபாயால் விலை அதிகரிப்பு இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.










