சாமர சம்பத் எம்.பி. பிணையில் விடுவிப்பு!

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க , பதுளை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தினால் இன்று (19)முற்பகல் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்தப் போது பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகப் புத்தகப் பைகளை பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டத்திற்காக இலங்கை வங்கியின் பதுளை மேற்பார்வை குழுவின் ஊடாக பெற்றுக் கொண்ட அரசாங்கப் பணமான ரூபாய் 10 இலட்சத்தை சட்டத்திட்டங்களுக்கு புறம்பாக வஞ்சகமான முறையில் பயன்படுத்தியமை மற்றும் நம்பிக்கை துரோகமிழைத்தமை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து குற்றத் தடுப்புத் திணைக்களம் பொது சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தல் சட்டத்தின் கீழ் பதுளை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 76406 இலக்கமுடைய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்வைக்கப்பட்ட இருதரப்பு வாதங்களையும் கவனத்தில் எடுத்த நீதவானால் இப்பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles