ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் நிச்சயம் ஒன்றிணைந்து செயல்படும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பு குறித்து இன்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ஐக்கிய தேசியக் கட்சிதான் எமது தாய்க்கட்சி, எமது தாய்வீடுதான் சிறிகொத்த. சிற்சில காரணங்களுக்காக நாம் பிரிந்தோம். எனினும், மீள இணைவதில் எவ்வித சிக்கலும் இல்லை.எனவே, இரு கட்சிகளின் இணைவு என்பது உறுதி.” எனவும் மரிக்கார் குறிப்பிட்டார்.










