தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று தொடக்கம் 16ஆம் திகதி வரை சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட அனுமதி வழங்கப்படுகிறது.
அதற்கமைய ஒரே தடவையில் உறவினர்கள், வெளிநபர்கள் மூவருக்கு கைதிகளை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.