உரிய அனுமதியின்றி தென்னைமரம் வெட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது – என்று பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சிலோன் ரீ நாமம்போல, சிலோன் கொக்கனட்டுக்கும் (தேங்காய்) சர்வதேச சந்தையில் சிறந்த கேள்வி ஏற்பட்டுவருகின்றது. இது எமது பொருளாதாரத்துக்கு பெரும் பலமாக அமையும். அடுத்த ஐந்து வருடங்களில் தேயிலை தொழில் துறைக்கு நிகரான வருமானத்தை இதன்மூலமும் ஈட்ட முடியும் என நம்புகின்றோம்.
மரம் வெட்டுதல் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்குள் தென்னை மரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனவே, இனி கிராம சேவகர், பிரதேச செயலாளரின் அனுமதியின்றி தென்னை மரம் வெட்ட முடியாது. அவ்வாறு வெட்டினால் பொலிஸாரால் கைது செய்ய முடியும். ” – என்றார்.