சீனாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய தீர்மானம்

இலங்கை மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் சீனாவிடமிருந்து டீசல் இறக்குமதியை பெற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு இது நவம்பர் இறுதிக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் நடைபெற்ற தொழில்துறை மாநாட்டில் இலங்கைக்கு ஏதேனும் ஆதரவு கிடைக்குமா என செய்தியாளர்கள் வினவிய நிலையில் அதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles