மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலைவேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேவேளை, சீரற்ற காலநிலையில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழை, கடும் காற்றால் 225 வீடுகள் சேதமடைந்துள்ளன. சீரற்ற காலநிலையால் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.