சூடானில் 24 மணி நேர போர் நிறுத்தம் முறிந்து ஐந்தாவது நாளாக நேற்றும் மோதல்கள் வெடித்த நிலையில் தலைநகரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர்.
இராணுவத் தளபதி அப்தல் பத்தா அல் புர்ஹான் மற்றும் துரித உதவிப் படையின் தளபதி முஹமது ஹம்தான் டக்லோ இடையே ஏற்பட்ட இந்த மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.
தலைநகர் கார்டூமில் நேற்று (19) காலையிலும் பாரிய வெடிப்புச் சத்தங்கள் மற்றும் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்ததாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தமது உடைமைகளை சுமந்தபடி வீடுகளை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர்.
வீதிகளில் இறந்த சடலங்கள் சிதறிக் கிடப்பதோடு துர்நாற்றம் வீசி வருவதாகக் கூறப்படுகிறது.










