செம்மணியில் இன்று 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்!

 

யாழ்ப்பாணம், செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று புதிதாக 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 3 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி அகழ்வுப் பணிகளின் இரண்டாம் கட்டத்தின் 25 ஆவது நாள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 3 எலும்புக் கூட்டுத் தொகுதிகளுமாக 102 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் 115 எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, ஒரு பெரிய எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்று, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்ட நிலையில் அவ்விரு எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles