செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

 

இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினர் எனக் கூறப்படும் நால்வர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உள்ளடங்குகின்றார். இவரின் அத்தையும் சிக்கியுள்ளார். அத்தையின் வீட்டிலேயே அவர் செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரமே இக்கைது இடம்பெற்றுள்ளது.

செவ்வந்தி தலைமறைவாகி இருந்த இடங்கள் மற்றும் சென்ற இடங்களுக்கு அவரை நேரில் அழைத்துச்சென்று விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

Related Articles

Latest Articles